இரந்து வாழும் வாழ்வைவிட
இறந்து போதலே இனிது
இறந்து போகும் நிலையில்கூட
சிறந்து நிற்றலே இனிது
இறைக்கெனப் படைக்கும் ஒன்றைவிட
இரக்குமுன் தருதலே இனிது
இரந்தபின் கிடைக்கும் அமிழ்தைவிட
இருக்கின்ற கஞ்சியே இனிது
தன்னினம் காக்கும் சொத்தைவிட
தன்மையாய் ஈதலே இனிது
வருவதால் பெருகும் மகிழ்வைவிட
தருவதால் வருவதே இனிது
✍️செ. இராசா
#இரவச்சம்
#வள்ளுவர்_திங்கள்_118

No comments:
Post a Comment