அனுபவம் அனுபவமே
உயர்ந்த கோபுரத்தை 
 உரசிடும் மேகங்கள்..
 
 சுட்டிடும் பாலையைத் 
 தொட்டிடும் தூரல்கள்...
 
 ஈர சாலைகளில் 
 ஊர்ந்திடும் ஊர்திகள்...
 
 மழையின் பேரழகில் 
 சுயமியில் சிரிப்பவர்கள்...
 
 புலனம் வழியாக 
 பகிர்ந்திடும் உறவுகள் 
 
 அனைத்தையும் ரசிக்கின்ற 
 அனுபவம் அனுபவமே.... 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment