புரியாத புதிருக்கு விடைதேடி ஒருவன்
சரியான பதிலுக்கு குருநாடி போனான் 
அரிதான விடயங்கள் அறியாத அவனும்
தெரியாத ஞானத்தை எளிதாகக் கற்றான்
 தெரியாத பலரோடு உறவாடும் பொழுதும்
 தெளிவான மனதோடு சரியாக நின்றான்
 சதியாலே சிலரோடு உறவாடும் பொழுதே
 விதியாலே சிலநேரம் தடுமாறி நின்றான் 
 
 ✍️செ. இராசா
 
 
No comments:
Post a Comment