இசைக்கும் உனக்கும்தான்
எத்தனை முரண்?!
இசை ரசிக்க..
நீ ருசிக்க..
இசை அணைக்க
நீ துளிர்க்க..
இசைத் தென்றல்..
நீ புயல்..
இசை மார்கழி..
நீ சித்திரை..
இசை ஊட்டி..
நீ சென்னை..
இசைத் தென்றல்..
நீ தேன்...நீர்
செ. இராசா
இசைக்கும் உனக்கும்தான்
எத்தனை முரண்?!
இசை ரசிக்க..
நீ ருசிக்க..
இசை அணைக்க
நீ துளிர்க்க..
இசைத் தென்றல்..
நீ புயல்..
இசை மார்கழி..
நீ சித்திரை..
இசை ஊட்டி..
நீ சென்னை..
இசைத் தென்றல்..
நீ தேன்...நீர்
செ. இராசா
பச்சரிசி முக்காலும்
பாசிப்பருப்பு காலுமாய்
பக்குவமாய் அலசியதை
குக்கரில் நீர்விட்டு
உப்புப் பெருங்காயத்தை
ஓரமாத் தூவிவிட்டு
ஆழவிசில் இரண்டும்
அமுக்கு விசில் இரண்டுமென
வந்த உடனேயே
வெந்தத இறக்கிவச்சு;
இஞ்சி மிளகு சீரகத்த
பச்சைமிளகாய் முந்திரியோட
அஞ்சாறு கருவேப்பிலைய
அப்படியே உருவிவிட்டு
நெய்விட்டக் கடாயில
நேக்காக் கிண்டிவிட்டு
இறக்கிவச்சச் சட்டியில
இதைப்போட்டுக் கிளறிவிட்டா...
அட..அட.அடா
அதுதானே பொங்கல்.
செ. இராசா
(கொஞ்சம் சீரகம் கூடிப்போச்சு....கோவிச்சுக்காதீங்க![]()
![]()
)
நாடுவிட்டு நாடுவந்து
.....நாளையெண்ணி வாழ்பவர்
நாடிநிற்கும் போது:அந்த
......நாளிலென்ன வாழுவார்!
ஓடிவந்த ஊரிலெங்கும்
......ஓடிவேலை செய்பவர்
ஊரிலுள்ள வேலையென்றால்
.....ஊமையாகி ஓடுவார்!
வாடிநின்ற காலமன்று
.....வாழ்வையெண்ணி நோபவர்
வாய்ப்புவந்த பின்னுமிங்கு
.....வெந்துநொந்து பேசுவார்!
தேடிவந்த தேவையொன்றைத்
......தேடிவிட்ட போதிலும்
தேடுமந்த தேடலொன்றைத்
......தீர்ந்திடாமல் தேடுவார்!
செ. இராசா
மரபுக்கவிதை
மரபு வரம்புக்குள் வார்த்திட்ட எல்லாம்
பரம்பரை தாண்டிநிற்கும் பார்
புதுக்கவிதை
மரபை உடைத்தும் வனப்புடன் செய்தால்
நிரந்தரமாய் நிற்கும் நிலைத்து
நவீனக்கவிதை
படிமம் வடிவமென்று பாங்கினை மாற்றி
பொடிவைத்துப் பேசும் பொறி
சந்தக்கவிதை
ஓசை நயம்மிக ஓடுகின்ற சந்தமெனில்
ஆசைக் குறைவுள்ளோர் யார்?
ஹைக்கூக்_கவிதை
வாமனன் போலிருந்து வைக்கின்ற ஈற்றடிக்குள்
யார்மனமும் வீழும் எளிது!
வசனகவிதை
சொல்லாடல் கொண்டு சுகமாகச் சொன்னால்தான்
எல்லோர்க்கும் போகும் எளிது!
செ. இராசா
எது சரி? எது தவறு?
இங்கே....
ஒருவனுக்கு ஒருத்தி என்பது
சில மதத்தின் வாழ்வியலென்றால்
ஒருவருக்கு பலரென்பதும்
சில மதங்களில் வாழ்வியலே...
கள்ளுண்ணான்மை சரி என்பது
ஒரு மறை சார்ந்த விளக்கமென்றால்
ஒயினை மட்டும் சரி என்பதும்
ஒரு முறை சார்ந்த வழக்கமே....
இங்கே...
பன்றிக்கறியைத் தவறென்போர்
மாட்டுக்கறியை சரியென்பர்
மாட்டுக்கறியை அச்சச்சோ என்போர்
மரக்கறியை பேஸ்பேஸ் என்பர்
வட்டி வாங்குதல் தவறென்போர்
உயிர்க்கொலையின் வகை சொல்வர்...
உயிர்க்கொலையை தவறென்போர்
வட்டி வாங்கிக் கொலை செய்வர்...
சிலருக்கு அருவ வழிபாடு சரி
சிலருக்கு உருவ வழிபாடு(ம்) சரி
சிலருக்கு இறை வழித் தூதரே சரி
சிலருக்கு தூதர் வழி இறையே சரி
நீயும் அவனும் வேறு வேறு என்றால்
அது த்வைதக் கோட்பாடு..
நீயும் அவனும் ஒன்றே என்றால்
அது அத்வைதக் கோட்பாடு..
இல்லவே இல்லை என்றால்
அது நாத்திகக் கோட்பாடு
இங்கே எது சரி? எது தவறு?
சகுனியின் நீதி என்பது
காந்தாரக் கண் சார்ந்தது
கர்ணனின் நீதி என்பது
சாதிய வாய் சார்ந்தது
இராமனின் நீதி என்பது
சீதைக்குத் தீ வைத்தது..
கண்ணகியின் நீதி என்பது
மதுரைக்கேத் தீ வைத்தது...
இங்கே எது சரி? எது தவறு?
அன்றைய தவறு என்பது
இன்றைய சரியாகலாம்
அந்தக் கலிலியோவின் கூற்றைப்போல...
இன்றைய சரி என்பது
நாளைய தவறாகலாம்
இந்த வாக்காளரின் ஓட்டைப்போல..
ஆமாம்...
எது சரி? எது தவறு?
செ.இராசா
கடவுளின் சொந்த பூமியில்----------கேரளா