#கவிதா:
கொஞ்சம் பொறுத்தா
......குறைஞ்சாநீ போயிடுவ
நெஞ்சம் பதறுதுபார்
.......நிக்காமல்- விஞ்சிவிஞ்சிக்
கத்திக் கரைஞ்சீன்னா
.......கைச்சோறும் கிட்டாது
புத்தில ஏத்திட்டு
.......போ!
#காக்கா:
என்னக்கா என்னநீ
....ஏதேதோ பேசுற?
முன்னைப்போல் இல்லாம
....நோவுற- அன்பக்கா
காக்கான்னா மட்டமா?!
.....கைச்சோறும் நட்டமா?!
ஆக்கியத போடுக்கா
.....அறிந்து!
#கவிதா
கட்டுன ஆளப்போல்
....காவியமாப் பேசுற!
பட்டுன்னு போகாம
....பாடுற!- வெட்கமின்றி
அந்தாளும் இப்படித்தான்
....அல்வாபோல் பேசியே
இங்கவந்து விட்டுட்டான்
....ஏன்?
#காக்கா
அண்ணென்ன செய்வார்க்கா?!
.....ஆனாலும் பாவம்தான்
எண்ணியிதைப் பார்த்தாக்க
.....என்னசொல்ல?!- உண்மையில
காக்காவே மேல்போல
....காசுபணம் தேவையென
சாக்கெல்லாம் சொல்வதில்லை
....தான்!
#கவிதா
இக்கரைக் கக்கரைபோல்
......எல்லாமே இப்படித்தான்
சிக்கலில்லார் யார்சொல்லு
.....தெய்வமே- அக்கறையாய்
நீயாச்சும் வந்திங்கே
....நேரடியாக் கேக்கிறப்போ
தீயாவும் போகும்
.....தெளிந்து!
செ. இராசா
23/09/2025
காக்காவும் கவிதாவும்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment