பள்ளம்விழும் எண்ணம் புகுந்திட
அல்லல்தரும் தொல்லை அனுபவம் தொடராதோ?!
இன்னல்;இனி இல்லை எனும்படி
இன்பம்புக ஒன்றைத் தரும்படி
எண்ணிப்பலர் கண்டுத் தெளிந்ததை அறிவீரோ?!
அண்டம்முதல் பிண்டம் சுழல்கிற
விண்ணின்துகள் ஒன்றை அறிந்திட
கண்ணின்;இடை உண்மை உணர்ந்திடப் பயில்வீரோ...
முற்றும்பிணி அற்றுக் கிளம்பிட
தொற்றும்வினைத் தொல்லை அகன்றிட
கற்றுத்தரும் மன்றப் பயிற்சியில் இணைவீரோ...