இருக்கின்ற போதே 
......இனிதாக வாழாமல்
எப்போது வாழுவாயோ...?
வருகின்றன காலம் 
.....வருகின்ற முன்பாக
வாழ்வதிலே என்னபிழையோ..?
முன்வினைகள் சேர்ந்தே 
......மூட்டையென வந்தோமே
அவ்வினைகள் தீருமுன்னே....
நன்வினைகள் இன்றி
.......நாட்களினைப் போக்கிவிட்டு
நற்பயனை நாடலாமோ?!!
உன்வினையை மாற்று
.....உலகமது மாறும் (2)
நன்வினையைப் போற்று
....நன்மைபல கூடும் (2)
செ. இராசா

No comments:
Post a Comment