காரணம் யாரென்பீர்?!
 செல்லரித்த புகைப்படத்தில்
 புல்லரிக்கும் புன்சிரிப்பால்
 காட்சிதரும் குழந்தையது
 காண்போரின் கண்களிலே
 கவிதையாக மலர்வதற்கு
 காரணம் யாரென்பீர்?!
 
 கருப்பு வெள்ளை நிறம் மறைத்து
 நெருப்பு வண்ண ஒளிவீசி
 கண்கவர் ஓவியமாய்
 கட்டழகு காட்சியாகி
 கண்களிலே விரிவதற்கு
 காரணம் யாரென்பீர்?!
 
 ----செ.இராசா---- 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment