#பல்லவி
எல்லாப் புகழும் இறைவனுக்கே 
எல்லாம் அண்ணல் நபிகளுக்கே
எல்லாப் புகழும் இறைவனுக்கே 
எல்லாம் அண்ணல் நபிகளுக்கே
புகழ்
மாயையில் பாதையை மாற்றாதே- அது
நாயகன் அருளென மறவாதே...
நானென நானென சொல்லாதே..
அவ; னாலின்றி அணுவும் அசையாதே
எல்லாப் புகழும் இறைவனுக்கே 
எல்லாம் அண்ணல் நபிகளுக்கே...
(புகழ்...)
#சரணம்
அல்லா என்ற
சொல்லால் இன்னல் 
இல்லா தென்று  போகாதோ...
அல்லா என்ற
சொல்லால் இன்பம் 
எல்லாம் வந்து சேராதோ..
வேதம் காட்டும் வழியினிலே
சென்றால் வெற்றி வாராதோ
ஞாலம் போற்றும் நெறியினிலே
நின்றால் யாவும் சேராதோ
எல்லாப் புகழும் இறைவனுக்கே 
எல்லாம் அண்ணல் நபிகளுக்கே...
செ. இராசா

No comments:
Post a Comment