லாஇலாஹா இல்லல்லாஹ்
எல்லாம் அவனாலே
லாஇலாஹா இல்லல்லாஹ்
வெல்வோம் அருளாலே
வேதம் தந்தானே-வெல்லும் 
மார்க்கம் தந்தானே
யாதும் தந்தானே-இங்கே
எல்லாம் அவனாலே...
ஆதம் தந்தானே -அண்ணல் 
நபியைத் தந்தானே
காலம் எல்லாமே-யாவும்
அல்லாஹ் அருளாலே..
இரமலான் வந்தாலே- நோன்பு
நோற்கும் செயலாலே...
தீமை எல்லாமே- தீரும்
தீனின் வழியாலே...
செ.இராசா

No comments:
Post a Comment