வாருங்கள் வாருங்கள்
அல்லாஹ்வை நாடி...
நம்பினோர் யாவருக்கும் 
அல்லாஹ்வே நாதி...
கேளுங்கள் கேளுங்கள் 
குர்ஆனை ஓதி...
கேட்டதைக் கொடுப்பதுவே அல்லாஹ்வின் நீதி...
நாடுங்கள் அல்லாஹ்வை நாடுங்கள்
கேளுங்கள் நெஞ்சாரக் கேளுங்கள்
ஓதுங்கள் குர்ஆனை ஓதுங்கள்
கூறுங்கள் நன்றியைக் கூறுங்கள் 
இரவும் பகலும் கலந்ததுதான்
இந்த நாட்கள் எனினும்
இரவில் இருளும் வரும்பொழுதே
விளக்கைத் தேடும் மனது..
இன்பம் துன்பம் கலந்ததுதான்
இந்த வாழ்க்கை எனினும்
துன்பம் பெரிதாய் வரும்பொழுதே
இறையைத் தேடும் மனது
கூறுவோமே அல்லாவின் நாமம்
தேடுவோமே அல்லாவை நாளும்..
போகாதே போகாதே மாறான பாதை..
தேடாதே தேடாதே எப்போதும் தீதை
இரமலான் புனித இரமலான்
இரமலான் புனித இரமலான்
செ. இராசா
25/03/2024
வாருங்கள் வாருங்கள் அல்லாஹ்வை நாடி...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment