*பல்லவி* 
அம்மா அம்மா அம்மா அம்மா 
எங்க தெய்வம் நீரே அம்மா..
அம்மா அம்மா அம்மா அம்மா 
உண்மை வெல்ல வேண்டும் அம்மா....
சிங்கம் போல ஆண்ட தாயே..
தேடுகிறோம் தெய்வம் நீயே...
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..
(அம்மா அம்மா...)
*சரணம்-1*
எரியும் நெருப்பில் செந்தீ பற்றி 
உடலை உதறி உயிர்நீக்கும்
எரிஞ்ச சாம்பல் பொடியில் மீண்டும் 
பீனிக்ஸங்கே பறந்துவரும்..
நாடு இருக்கும் நிலைய பாத்து 
உடனே நீங்க வந்திடனும்... 
எதிரி கண்ணில் விரலை நீட்டி 
குடையும் அழகை கண்டிடனும்..
ஊரு இங்கே ரெண்டு பட்டா 
கூத்தாடிக்குக் கொண்டாட்டம் 
கழகத்துக்குள் கலகம் நடந்தா 
யாருக்கிங்கே சந்தோசம்?
அம்மா ஆட்சி நடப்பதற்கு 
வணங்குகிறோம் மண்ணைத் தொட்டு.. 
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..
  
(அம்மா அம்மா...)
*சரணம்-2*
அண்ணன் எப்போ காலி ஆவான் 
திண்ணை எப்போ காலி ஆகும் 
என்றுவாழும் கூட்டமிங்கே 
காலை ஊன்ற பார்க்குதிங்கே 
 
பொய்யச் சொல்லி புரளியச் சொல்லி 
வெல்லும் அந்த கூட்டத்துக்கு..
உண்மை சொல்லி உள்ளத சொல்லி 
மீண்டும் வெல்ல வேண்டுமுங்க...
அம்மாதந்த திட்டம் போல 
நல்ல திட்டம் மேலும் செய்ய..
சத்தியமா நம்மைப் போல 
வேற யாரும் இங்கே இல்ல.. 
மீண்டும் அம்மா ஆட்சி செய்ய 
வேண்டுகிறோம் வா தாயே...
தெய்வமெங்கத் தெய்வத்தாயே
சிங்கம் போல வா தாயே... 
தெய்வமெங்கத் தெய்வத்தாயே
சிங்கம் போல வா தாயே..
(அம்மா அம்மா...)
*பல்லவி*
சிங்கம் போல ஆண்ட தாயே..
தேடுகிறோம் தெய்வம் நீயே 
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..
(அம்மா அம்மா...)
செ. இராசா
10/02/2023
அம்மா அம்மா அம்மா அம்மா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment