1. *திருப்பாத கோலம்*
அருவ இறைவனின்
அருட் சுவடுகள்
2. *மணைப்பலகை*
மனைக்கைகள் தீட்டிய
மணைப்பலகை.
3. *வேல்*
ஆழ்ந்து - அகன்று - கூர்ந்து நிற்கும் அறிவின் அடையாளம்
வேல்
4. *விளக்கு*
அறியாமை இருள் விலக்கும்
அறிவின் ஒளி விளக்கு
5. *தாம்பூலம்*
அன்பின் வெளிப்பாடு தாம்பூலம்- அதை
உணர்த்தும் வரைகோடு மாக்கோலம்.
6. *பூச்செண்டு*
கோல மாக்கொண்டு செய்த
நீள பூச்செண்டு.
7. . *குருவிக்கூடு*
குருவிக் கூட்டில் மான்கள் வாழலாம்
உறவின் கூட்டில் உலகை ஆளலாம்.
8. *கத்தி*
சாணை பிடிக்கக் கூர்மையாகும்
கத்தி!
வானை பிடிக்கத் தேவையாகும்
புத்தி!
9. *கோபுர கலசம்*
கோபுரம் கோலமானால்
கோபாலபுரமும் கும்பிடுபோடும்
10. *சங்கிலி*
மஞ்சள் கவுறும்
தங்கச் சங்கிலியே
மச்சான் அவர் தந்தால்
11. *குட்டிச் சந்தனம்*
மணக்கும் சந்தனமே
மணக்க சம்மதமோ?!
12. *சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா*
விழிகளின் மோதலால்
பேரொளிப் பிரளயமாம்
ஓ.....இதுதான் காதலா?
13. *முடிவில்லாத் தொடர்*
பிரபஞ்சம்போல் முடிவிலி நீ
உன்னையே அறியா அறிவிலி நான்!
14. *ஆனந்தம்*
புறத்தால் வருவதல்ல
அகத்தால் வருவதே ஆனந்தம்
15. *தெப்பக்குளம்*
வரப்புயர நீருயரும்- வரும்
வரவுயர வாழ்வுயரும்!
16. *சூரிய மண்டலம்*
மையநோக்கு விசையிருந்தால் பால்வெளி
பையநோக்கும் விசையிருந்தால் பாழ்விழி
17. *ஐஸ்வர்யம்*
அள்ள அள்ளக் குறையாத
அட்சயப் பாத்திரமே
அன்பிற்கே சாத்தியமே!
18. *அக்னிக்குண்டம்*
ஆம்பலும் சாம்பல்தான்
அக்னியின் வாய்க்குள்ளே...
19. *கேடயம் காக்கும்*
நாக்கும் வாக்கும் மௌனித்தால்
காக்கும் அஃதோர் கேடயமே...
20. *அக்னி நட்சத்திரம்*
நிழலின் அருமை வெயிலால்
வெயிலின் அருமை எதனால்?!
21. *காத்தாடி*
இறக்கை இருந்தாலும்
பறக்க முடியவில்லை
காத்தாடி
22. *பொற்கொடி*
விற்கொடி சேரனுக்காம்
பொற்கொடி மாமனுக்கே...
23. *அணு*
எப்பொருள் எத்தன்மை தாயினும்
அப்பொருள் யாவும் அணு!
24. *மலர்ச்சோலை*
பூங்கா வனமிருந்தால் வண்டுவரும்
ஏங்கா மனமிருந்தால் எல்லாம் வரும்!
25. *மயிலிருகு*
அதெப்படி குட்டி போடும்?!!
அது ஆண் தோகையல்லவா...!!
26. *அலை*
வந்து வந்து போகிறது
கரையேற மனமின்றி...
27. *கோட்டை*
அண்ணனென்ன தம்பியென்ன
அதிகாரக் கோட்டை முன்னே..?!!
28. *மேகம்*
கருத்துவிட்டதாம்
கண்ணீர்பொழியும்
கார்முகில்!
29. *அலங்காரப் பந்தல்*
அழகைக் கூட்டும் அலங்காரம்
அதனைக் காட்டும் அருங்கோலம்
28. *பூங்குருவி*
குயிலப் புடிச்சுக் கோலம் வரைஞ்சு
கூவச் சொல்லுகிற உலகம்!
29. *கொடிமலர்*
கொடியில் பூத்த மலரை
தரையில் வார்த்ததாரோ?
30. *பூவிதழ்*
வண்டுகள் வந்திறங்கும் தளவாடம்
ஜந்துகள் மனதையது களவாடும்
31. *Welcome*
அகத்தின் உணர்வு
எழுத்தில் தெரியும்
32. *கிரீடம்*
தலைக் கவசம்
உயிர்க் கலசம்
33. *குத்துவிளக்கு*
ஒற்றைக் காலில் நின்றபடி
ஒளித்தவம் புரிகிறது
குத்துவிளக்கு
34. *ராஜரதம்*
மனக்குதிரை பூட்டி
யாரும் வலம்வரலாம்
ராஜாபோல்....
35. *தொங்கு விளக்கு*
ஒளியாடும் ஊஞ்சல்
36. *அரண்மனை*
தமிழில் சுந்தர் சி.க்கு பிடித்த வார்த்தை.
37. *இதய மலர்*
நான்கிதழ் கொண்ட
சிவப்பு மலர்....
38. *அலங்காரச் சட்டம்*
தச்சனின் மா கவிதை
39. *நட்பு*
இருந்தால் இனிப்பு
பிரிந்தால் கசப்பு
உணவிலிடும் உப்பு நட்பு
40. *ஒற்றுமை*
பலம் என்ற சொல்லின் மாற்றுச்சொல்
41. *நான்கு வாயில்*
திசைக்கொரு வரவேற்பு
42. *விநாயகர் மண்டபம்*
கணபதியின் கவியரங்க மேடை
43. *பறவை*
விசா தேவையில்லா
உலகப் பிரஜை
44. *வைரம்*
கரியும் வைரமாகும்
காத்திருந்தால்...
45. *ராஜம்*
அழகிய திருமகள்
46. *அமைதி கோட்டை*
ஆர்ப்பாட்டமில்லா கோட்டை
47. *மேஜிக்*
கண்கவர் வித்தை
48. *நெத்திச்சூடி*
வகுடில் ஆடும் தோரணம்
49. *நாட்டியம்*
பரதக் கலையின் உச்சம்
50. *கம்பீரம்*
தமிழ்ச் செருக்கு
51. *தும்பி*
உலங்கு வானூர்தியின்
உயிரியல் உவமை
52. *காளை*
ஏறு தழுவுதல்தான் எத்தனை அழகு
அடங்குவதும் காளை
அடக்குவதும் காளை...
53. *தீபாராதனை*
ஒளியை ஒளியால் காட்டும் உன்னதம்
54. *தேன்மலர்*
தேனீக்கள் தேடும் காதல் மலர்*
55. *மின்னல்*
மழை நாட்டியம் பார்க்க
ஒளியடிப்பது யாரோ?!
56. *சுருள்*
பால்வீதி வளையத்தைப்
பறைசாற்றும் ஓவியம்
57. *ஆலவட்டம்*
இறைவனுக்கே வியர்த்தால்
என்னதான் செய்வதோ?!!
58. *சந்திர மாலை*
நிலாவின் ஒளியில்
உலாவும் பொழுது
59. *சிம்மாசனம்*
அரசனின் உயரம்
அரியணை கூறும்
60. *விருந்து*
அன்பின் வெளிப்பாடு
விருந்தே வழிபாடு
61. *மலர்க்குடை*
குடைக்குள் மலருண்டு
மலரால் குடையுண்டோ???
62. *மங்கலம்*
மனமது செம்மையானால்
தொடுவதெல்லாம் மங்கலமே!
63. *வைரக் கம்மல்*
காதோரக் கவிதையா உன் கம்மல்?!
64. *வெண்சங்குத்தேர்*
வெண் சங்குத் தேர்- மனக்
கண்கொண்டு பார்- மனம்
உண்டென்றால் பார்!
65. *மலர் ஊஞ்சல்*
களைப்பைக் களைந்து
தலையை வருடும் மடி
மலர் ஊஞ்சல்.
66. *நவரத்தினம்*
ஒன்பதையும் தாங்கும்
ஓவியத் தங்கம்.
67. *மத்தாப்பூ*
மண்ணிலே பத்தவைக்க
விண்ணிலே விரியும் பூ
68. *சரவிளக்கு*
ஒற்றுமையை வலியுறுத்தும் ஒருவிளக்கு
ஒற்றை ஒளிபரப்பும் சரவிளக்கு!
69. *மகுடம்*
சூடுவதல்ல
சூட்டப்படுவது!
No comments:
Post a Comment