புதிதாகவேப் பிறந்தோமென புயலாயெழு நாளும்!
விதியாயினும் வினையாயினும் விரைவாகவே மாறும்!
அதிகாரமாய்க் குரலேற்றியே அரங்கேறிடும் ஆட்டம்!
அதிவேகமாய் வெறுங்கானலாய் அடிவாங்கியே ஓடும்!
எதிராகவே புதிராகவே எதிர்ப்போர்சிலர் யாரும்
எதிர்தோன்றியே முறையாகவே இணைவாரதைப் பாரும்!
இதிகாசமாய் அதிவாசமாய் இனிதோழமை யாவும்
நதிபோலவே அழகாகவே நடைபோட்டிட வேணும்!
No comments:
Post a Comment