#இன்றைய_தினம்_பிறந்தநாள்_கொண்டாடும்
#மனைவியாருக்கு
#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துகள்
வடிவானவள் 
.....வெடியாயென 
...........வருவாளெனில் யாவும்
அடிதூளென 
.......அடடாவென
.............அழகோவியம் ஆகும்!
இடியாயிலை 
......இசையாயென  
............எனிலோடிடும் தாளம்!
முடிவாகிட 
........முறையாயொரு 
...............மொழிவாயொரு ராகம்!
விழியாடிடும் மொழியால்-நீ
மொழிவாய்ப் பழபொழிகள்....
இதழோவிய வரியால்- நீ
தருவாய்ப் புதுக்கவிகள்..
...யாவும் 
.......ஆகும் 
.........தாளம்
............ ராகம்
கலையானவள்
......கவியாயென
.........வருவாளெனில் நாளும்!
நிலைமாறிய
..... நிலையாயென
..........நிஜமாகவே மாறும்!
சிலையானவள்
.......சிகையாடிட
..........சிரிப்பாளெனில் பாரம்!
தலைகீழென
.... தடுமாறிட
.........விரைந்தோடியேப் போகும்!
மரபோடிடும் உடையால்- நீ
வருவாய்ப் புதுநடையில்...
தமிழாடிடும் உரையால்- நீ
தணிப்பாய் மனச்சுமைகள்...
......நாளும்
.... ....... மாறும் 
...................பாரம்
...................போகும்!
செ. இராசா

No comments:
Post a Comment