சரி விடு பார்த்துக்குவோம்
சரி விடு பார்த்துக்குவோம்![]()
என்ன இப்போ நடந்தது
எதுக்கு இந்தக் கவலை![]()
நல்ல காலம் பிறக்குது
நமக்கு ஏனோ வரலை![]()
சின்னச் சின்னச் சறுக்கலு
சிதைச்சிடுமா ஆளை![]()
ஏறும் முன்னே வழுக்குது
ஐயோ நானும் ஏழை..![]()
சிங்கம் போல சீறிநில்லு
போட்டிடுவான் மாலை![]()
எங்கே நாம நிக்கிறது
வாறுறானே காலை![]()
சும்மாச் சும்மாக் கலங்காத
தேடி வரும் நாளை![]()
நாளை வந்து சொல்லாதநீ
நாடி வரும் வேளை
சரி விடு பார்த்துக்குவோம்
சரி விடு பார்த்துக்குவோம்![]()
என்ன வேணாம் சொல்லு-நீ
வெல்ல வேணும் தில்லு.....
இன்னும் இன்னும் செல்லு- நீ
முன்னேப் போயி நில்லு..
செ. இராசா

No comments:
Post a Comment