இமைக்கா நொடிகளையும்
 மலரும் புன்னகையில்- எனை
 மயக்கும் மல்லிகையே- நீ
 உதிர்க்கா வார்த்தையையும்- என்
 உதிரம் சொல்லுதடி!
 
 கண்ணில் கவியெழுதி- என்
 நெஞ்சில் பதிந்தவளே- நீ
 நினைக்கா வரிகளையும்- என்
 நெஞ்சம் படிக்குதடி!
 
 இமையில் தாளமிட்டு- எனை
 இசைக்கும் மெல்லிசையே- உன்
 இமைக்கா நொடிகளையும்- என்
 இதயம் உணருதடி!
 
 ✍️செ. இராசா 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment