10/08/2022
மன்னராட்சி Vs மக்களாட்சி
09/08/2022
வியர்வை
பணக்கார மேனியில்
பார்த்திடாத; நீர்
பாட்டாளி மேனியில்
பாய்ந்து வருகிறாய்....
வாடை காலத்தில்
வற்றிவிடும்; நீர்
கோடை காலத்தில்
குதித்து வருகிறாய்....
ஊட்டி அறைக்குள்
உறங்கிவிடும்; நீர்
பூட்டிய அறைக்குள்
பொங்கி வருகிறாய்...
அசையாத தேகத்தில்
அடங்கியுள்ள; நீர்
அசைகின்ற தேகத்தில்
ஆர்ப்பரிக்கிறாய்...
காற்றின் கூடலில்
கானலாகும்; நீர்
காதலின் கூடலில்
கவிதையாகிறாய்...
உச்சி வேளையில்
நசநசக்கும் நீர்
உச்ச வேலையில்
கமகமக்கிறாய்....
உண்மையில்..
நீர் அதிசயமே...
#வியர்வை
இந்தத் கவச உடையைப் போட்டதால் ஏற்பட்ட வியர்வையில் உருவான வரிகள்....
வளர்ந்த மனிதர்கள் பக்கத்தில் நின்றால் நம் உயரம் தெரியாது என்பது இதுதானோ?!
அநியாயத்துக்கு வளர்ந்திருக்கான்... இந்த செர்பியாக்கார தம்பி.....படத்தின் Frameக்குள் கூட அடங்கல...
08/08/2022
உழவும் உயிரும் ----------- ஔவைத் திங்கள் - 003
உழுதுண்டு வாழ்வோர் உயர்வார் என்றீர்
அழுதுண்டு வாழ்கின்றார் ஏன்?
(1)
உற்பத்தி செய்யும் உழவர்கள் கீழிருக்க
விற்பவர்கள் எப்படி மேல்?
(2)
கடனுதவி தந்தாலும் கையில்;ஏன் இல்லை
நடைமுறைச் சிக்கல் நவில்.
(3)
செய்யும் பொருளுக்கு செய்வோனைக் கேட்காமல்
பொய்யாய் விலைவைப்போர் யார்?
(4)
உழவனைக் கொன்றபின் ஊணெங்கேக் கிட்டும்
இழவுதான் தீர்வா இயம்பு.
(5)
நீருக்காய்க் கையேந்தி நின்றிடும் முன்னாலே
மாரிநீர் போனதெங்கே சொல்.
(6)
உழுவுந்து வாங்கவும் ஒன்றுமே இல்லார்
விழுவதுதான் தீர்வா விளக்கு.
(7)
பணமுள்ளோன் தானா பணம்படைப்பான் இங்கே?
உணவளிப்போன் என்னாவான் ஓது!
(8.)
விளைநிலம் எல்லாம் விலைமனை ஆனால்
விளைவென்ன வாகும் விளக்கு.
(9)
வரிகளாய்ப் போட்டு வதைத்திடும் முன்னே
உரியவழி என்ன உரை.
(10)செ. இராசா
06/08/2022
குல்லாவின் சொம்புக்காக

என்னைப்போல் உள்ளதாய்




04/08/2022
மெட்டு: என்ன விலை அழகே?

03/08/2022
தலைப்பாகை

01/08/2022
கீழ்மை அகற்று --------------- ஔவைத் திங்கள் - 002
29/07/2022
இடைவெளி
காலத்தை மட்டுமல்ல
தூரத்தையும் கூறுபோடும் காரணியே
இந்த இடைவெளி...
இங்கே...
இடைவெளியே இல்லாமல்
எதுதான் சாத்தியம்?
பகலின் இடைவெளிதானே இரவு!
உழைப்பின் இடைவெளிதானே உறக்கம்!
உயிரின் இடைவெளிதானே மரணம்!
வார்த்தைகளின் இடைவெளியில்தானே
வாக்கியங்கள்....
வாய்ப்புகளின் இடைவெளியில்தானே
வாரிசுகள்....
வாரக் கடைசி என்பதென்ன?
இரண்டு வாரங்களுக்கான இடைவெளிதானே..
மாதக் கடைசி என்பதென்ன?
சம்பள நாளுக்கான இடைவெளிதானே..
உண்மையில்...
இடைவெளி மட்டுமல்ல
இடை-வெளிகூட அழகானதே...
ஆம்.....
தண்டவாள இடைவெளி என்பது
தடம்புரளாமல் இருக்கவே...
தாளலய இடைவெளி என்பது
இசைமீறாமல் இருக்கவே..
இடைவெளியே இல்லாமல்
எதுவுமே இல்லைதான்...
ஆனாலும்...
காதலில் இடைவெளி வலிக்கிறதே..
நட்பில் இடைவெளி வெடிக்கிறதே..
உறவில் இடைவெளி கசக்கிறதே...
கவியில் இடைவெளி கனக்கிறதே..
இடைவெளி துன்பம்தான்
ஆனால்..
இடைவெளியே இல்லாமல்
இன்பமும் இல்லை....
எனில்....
நாமும் விடுவோம்
ஒரு சிறு இடைவெளி
27/07/2022
கடவுளின் நாக்கு



