15/01/2026

சிட்டாத் துள்ளிவரும் காளை

 

சிட்டாத் துள்ளிவரும் காளை- அட
விட்டாத் தூக்கிவிடும் ஆளை
தொட்டாச் சிலிர்த்துவிடும் தோளை- நீ
கெத்தாப் பிடிக்கவிழும் மாலை
ஏய்
கட்டு கட்டு ஜல்லிக்கட்டு
கட்டுப்பட்டு காசக்கட்டு
தட்டு தட்டு தொடையத்தட்டு
கஷ்டப்பட்டு திமிலத்தொட்டு
பிட்றா பிட்றா பிட்றா
வர்றான் பாரு பிட்றா....
மண்ணோட வீரத்தை விளையாடிக் காட்டு
உன்னோட வேகத்தைக் கூராகத் தீட்டு
ஜெயிச்சாலே விடுவாங்க ஊரெங்கும் வேட்டு
நமக்காக உருவாகும் இதுபோலப் பாட்டு
வாடிவாசல் நடுநடுங்க திமிறி வர்றான்பாரு
ஊருசனம் பார்க்குமுங்க ஜெயிக்கப் போவதாரு
ஆடியோடி ஜெயிச்சுவந்தா கொடுக்குறாங்க காரு
தமிழனோட வீரத்தைநீ மாறுதட்டிக் கூறு...
ஏய்
கட்டு கட்டு ஜல்லிக்கட்டு
கட்டுப்பட்டு காசக்கட்டு
தட்டு தட்டு தொடையத்தட்டு
கஷ்டப்பட்டு திமிலத்தொட்டு
பிட்றா பிட்றா பிட்றா
வர்றான் பாரு பிட்றா....
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை
மறுமையும் புல்லாளே
ஆய மகள்...
(கொன்றுவிடும் என்றெண்ணி
காளையின் கொம்பைப்பார்த்து அஞ்சும் வீரனாநீ...
சீ உன்னை இப்பிறப்பில் அல்ல எப்பிறப்பிலும் தழுவேன்யான்...)
சிட்டாத் துள்ளிவரும் காளை- அட
விட்டாத் தூக்கிவிடும் ஆளை
தொட்டாச் சிலிர்த்துவிடும் தோளை- நீ
கெத்தாப் பிடிக்கவிழும் மாலை
ஏய்...
கட்டு கட்டு ஜல்லிக்கட்டு
கட்டுப்பட்டு காசக்கட்டு
தட்டு தட்டு தொடையத்தட்டு
கஷ்டப்பட்டு திமிலத்தொட்டு
பிட்றா பிட்றா பிட்றா
வர்றான் பாரு பிட்றா....
✍️செ. இராசா

No comments: