26/05/2025

வருகிறோம் வளர்கிறோம்

 

வருகிறோம் வளர்கிறோம்
.......வளர்ந்தபின் போகிறோம்
மாறியது ஒன்றும் இல்லையே!
தருகிறோம் தளர்கிறோம்
.......தளர்ந்தபின் விழுகிறோம்
தாண்டியது ஒன்றும் இல்லையே!
ஒருவராய் உயிர்க்கிறோம்
........ஒருவரில் கலக்கிறோம்
ஓடியது வாழ்வின் எல்லையே!
ஒருவரின் வழியிலே
........ ஒருவரை விதைக்கிறோம்
ஊழ்வரவு தீர வில்லையே!
✍️செ. இராசா

No comments: