11/05/2025

பாகிஸ்தானிய நண்பர் திரு. ஹபீப்

 

இனி இராணுவத்தில் சேர உடல் தகுதியைவிட தொழில்நுட்ப அறிவும் செயற்கை நுண்ணறிவு என்னும் AI தொழில் நுட்ப அறிவுமே தேவை என்பதை உணர்த்தியுள்ளது இந்தப் போர். அதைவிட முக்கியம் போலித் தகவல்களைப் பரப்பும் சமூக வலைத்தளப் போராளிகளுக்குத் தக்க பதிலடி கொடுக்க அதே ரீதியிலான சமூக வலைத்தளப் பின்புலம் கொண்ட ஒரு நான்காவது படையும் தேவையென்பதே. எது எப்படியோ இந்தப்போர் முடிவுக்கு வந்தமையில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் உறவுகளே...

காரணம், நான் பற்பல பாகிஸ்தானிய மக்களுடன் பழகியவன் என்கிற ரீதியில், அவர்களைப்பற்றி நன்றாகவே அறிந்து வைத்துள்ளேன். ஆம் பெரும்பாலானவர்கள் உண்மையை உணர்ந்த நல்ல நண்பர்களே. நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளதை நன்றாகவே உணர்ந்தவர்கள். இதை உணராத சில அரசியல் வாதிகளாலேயே இப்படிப்பட்ட சூழல் உருவாகியுள்ளது என்பதை ஒத்துக் கொள்பவர்கள்.

எது எப்படியோ... நாங்கள் இங்கே கத்தாரில் உள்ள இந்திய பாகிஸ்தானியர்கள் ஒற்றுமையாகவே உள்ளோம் என்பதை உறுதிப்படுத்தவே இந்தப் படத்தைப் பகிர்கின்றேன் உறவுகளே...

இந்தப் படத்தில் உள்ளவர் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பாகிஸ்தானிய நண்பர் திரு. ஹபீப் அவர்கள் (முன்னாள் கத்தார் அரசு ஊழியர்) அவருடன் அடியேன் செ. இராசமாணிக்கமாகிய யாம்.

✍️செ. இராசா

No comments: