பிரியேன் எனச்சொல்லி பின்னாலே வந்து
பிரிந்தாள் இராமனின் பெண்டு 
(1)
 
அண்ணியார் சீதையோ அண்ணனுடன் சேர்ந்துவர
பெண்டின்றி வந்தான் பிரிந்து
(2)
 
மனைவியிடம் சொல்லாமல் வந்ததேன் புத்தா?!
மனையகன்று போவதா மாண்பு?!
(3)
 
கர்ணனை பெற்றதாய் காட்டாற்றில் விட்டுவந்த
கர்மாவின் சோதனையைக் காண்
(4)
 
குந்தி (துரியோதனன் அரண்மனையில்)
 எதிரிகள் கூடத்தை ஏற்றிருந்த போதும்
மதிமனம் எல்லாமும் மைந்து
(5)
 
தன்னைப் பிரிந்திருந்து தன்னோடு வந்தாலும்
தன்வினையால் போனார் தனித்து
(6)
 
பொய்சொல்லா காரணத்தால் போனதுதான் என்றாலும்
மெய்யாலே வென்றான்பார் மீண்டு
(7)
 
சத்தியவான் செத்துவுயிர் சாவித்திரி மீட்டகதை
சத்தியம் வென்றதன் சான்று
(8)
 
பிரிவுகள் எல்லாம் பிரிவென ஆகா
பிரிவெண்ணம் ஒன்றே பிரிவு
(9)
 
பிரியாமல் வாழப் பிரிவுகளும் வேண்டும்
பிரிந்தபின் கூடும் பிணைப்பு
(10)
 
 
No comments:
Post a Comment