29/10/2019

#பாலும்_கள்ளும்_நிறத்தால்_ஒன்றே



கொள்கை இருக்கிற நல்லோரும்
கொள்ளை அடிக்கிற தீயோரும்
கொண்ட லெட்சியம் நிறைவேற
திண்ணிய எண்ணம் கொள்கின்றார்!

மனத்தை ஒருமையில் வைக்கின்ற
மனத்தவம் போன்ற பயிற்சிகளில்
கற்றோர் நம்பிக்கை வைத்தாலும்
மற்றோர் முன்னிலை வகிக்கின்றார்!

அறநெறி போற்றும் அறிஞரைப்போல்
அறநெறி போற்றாக் கயவர்களும்
#பால்போல் ஒன்றாய்த் தெரிந்தாலும்
#பாழ்_கள்(ல்) மனத்தால் பிரிகின்றார்!

✍️செ. இராசா

#பாலும்_கள்ளும்_நிறத்தால்_ஒன்றே

பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: கயமை / Baseness

குறள் 1073:
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

மு.வரதராசன் விளக்கம்:

கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

No comments: