இடம் தீயால் எரிந்தபின்னும்
இடர் தீயின் அனல் பொருத்து
 இறைத் தீயின் வினையென்றே
 இத்தீயை நீர் நினைத்து-உம்
 இதயத் தீயில் நீரிறைத்தீர்!
 
 கடைத் தீயால் ஊழியர்கள்
 பயத் தீயால் மனதினிலே
 பசித் தீயை நினைத்தார்கள்!
 கொடும் தீயது பற்றாது
 உளத் தீயினில் நீரிறைத்தீர்!
 
 வாழ்வீர் நீர் பல்லாண்டு!
 மீள்வீர் நீர் பலத்தோடு!
 
No comments:
Post a Comment