அடடாயிவள் அவடாயென
.....அலைபாய்ந்திட நெஞ்சம்
விடுடாயென விதிடாயென
.......விரைவாகவே அஞ்சும்!
இடராயிலை இனிதாவென
......இழையோடிட நெஞ்சம்
இடியேனென இவளேனென
......இயல்பாகவே அஞ்சும்!
சுடராயிலை இருளாவென
.....சுமையேறிடும் நெஞ்சம்
சுயவேதனை இதுரோதனைத்
......துயரேயென அஞ்சும்!
கடலாயிலை கடுகாவென
......கவிபாடிடும் நெஞ்சம்
கரைசேர்ந்திடும் வழிதேடிட
..... கனிவாகவே கெஞ்சும்!செ. இராசா
17/01/2024
அடடாயிவள் அவடா
15/01/2024
12/01/2024
அருள் தொண்டிற்கான விருது



08/01/2024
குரல்
என் குரலும்
அரங்கேற்றம் ஆகாதா?
என் குரலையும்
கேட்டுவிட மாட்டார்களா?
இப்படிக்
குரலுக்காகக்
குரல்கொடுப்போரை
அறிவீர்கள்தானே?!
ஆகா....
என்னே கம்பீரமான குரல்?
ஐயே...
என்ன கேவலமான குரல்?
இப்படிக்
குரலைவைத்தே
குறிப்பிடுவோரையும்
அறிவீர்கள்தானே?!
எனில்..
என்றேனும் இந்தக் குரலைப்பற்றி
சிந்தித்துள்ளீரா?!
காற்றை உள்வாங்கி
ஒலியாய் உருமாற்றி
மொழியாய் வடிவேற்றி
குரலாய்ப் பதிவேற்றும் இந்த
மனித விலங்கைப்போல்
மற்றொரு விலங்குமுண்டா?!
ஆம்...
இந்த இனத்தில் மட்டும்தான்
வயதுக்கு வந்தபின்
மெல்லினம் வல்லினமாகி
ஆண்குரல் கட்டைக்குரலாகும்!
அதுவரைக்கும்
என்ன... என்றவன்
அதன்பின்
என்ன்ன்ன....என்பான்!
இந்த இனத்தில் மட்டும்தான்
திருமணமானபின்
மெல்லினக் குரலுக்கும்
வல்லின வலிமைவரும்!
அதுவரைக்கும்
என்ன்ன்ன என்றவன்
அதன்பின்
ஹி..ஹி..என்பான்!
யாரையும் ஆளைப்பார்த்து மட்டும்
எடைபோடாதீர்...
ஆஜானுபாவாய் இருப்பான்
நயன் தாராபோல் பேசுவான்..
அரைச்சாணே இருப்பான்
அடோல்ப் ஹிட்லர்போல் கர்ஜிப்பான்.
காரணம்
குரலே தவிற...உருவமல்ல!
இங்கே எவ்வளவு பெரிய
பேச்சாளராய் இருந்தாலும் சரி
பாடகராய் இருந்தாலும் சரி
குரலொலியைப் பொறுத்தே
கரவொலி மேலோங்கும்!
எனில்;
கரவொலி மேலோங்க
குரலொலியைப் பாதுகாப்பீர்!செ. இராசா
06/01/2024
எப்ப வருவாயோ
எப்ப வருவாயோ- அப்பா
எப்ப வருவாயோ
எப்ப வருவாயோ- அப்பா
எப்ப வருவாயோ.....
நாளைக்கே வருவதாக
நாளுபூராம் சொல்லுமப்பா
நாளைக்கும் நாளையின்னா
நாளை எப்ப வருமப்பா?!!
வாங்கித்தந்த பொம்மையெல்லாம்
வக்கனையா தூங்கு தப்பா
ஏங்கிப்போன என்னைக்காண
வந்தாயென்ன தப்பா அப்பா?!
04/01/2024
நேர்மையோடும் வாய்மையோடும்
நேர்மையோடும் வாய்மையோடும்
.......வாழுகின்ற மாந்தரை
கூர்மையான வார்த்தையாலே
........கூசிடாமல் ஏசுவார்!
ஆர்வமோடும் ஆசையோடும்
.......தொண்டுசெய்யும் நேசரை
கோவமூட்டி வேகமூட்டி
.......கொள்கைமாறத் தூண்டுவார்!செ. இராசா
03/01/2024
தட்டுங்க தட்டுங்க

02/01/2024
காந்திவேசம்
கால்வயித்துக் கஞ்சிக்குத்தான்
காந்திவேசம் போடுறான்....
காக்காசப் பார்த்ததுமே
டாஸ்மாக்கத் தேடுறான்....
நாலுபேரு நிக்கசொல்ல
நாயகனாக் காட்டுறான்
ஆளுயாரும் இல்லையினா
நாராசமாப் பேசுறான்...
எல்லாம் நடிப்பு சாமி- இது
பொல்லாதவர் பூமி!
என்னப் பொழப்பு சாமி- இதில்
நல்லவர்..யார் காமி?!செ. இராசா
01/01/2024
இன்றுமுதல்
இன்றுமுதல் மாறுவதாய் எப்போதும் சொல்லுவதால்
'இன்றுமுதல்' என்றாலே ஏசுகிறார்- என்னசெய்ய?!
'இன்றுமுதல்' என்றசொல்லை இங்குள்ளோர் முன்னாலே
இன்றுமுதல் சொல்லேன் இனி!
புத்தாண்டு நன்நாளில்
புத்தாண்டு நன்நாளில்
...பொய்நீங்கி மெய்யோங்க
......பூதூவி வேண்டுகின்றேன்!
எத்திக்கும் எல்லோரும்
... என்றென்றும் வாழ்வோங்க
...... என்நெஞ்சில் வாழ்த்துகின்றேன்!
சித்தர்கள் ஞானத்தை
...சிந்தைக்குள் வைத்தோங்க
.....செந்தமிழைப் போற்றுகின்றேன்?
எத்தர்கள் மூடர்கள்
.... எல்லோரும் நன்றாக
....... என்பாட்டை ஏற்றுகின்றேன்!செ. இராசா