அன்பே..அமுதே.. ஐ லவ் யூ
அன்பே..அமுதே.. ஐ லவ் யூவென
 அவனையும் அறியாமல் உளறினான்
 அவள் யாரென்று
 அருகிலிருந்தவள் அலறினாள்...
 அதகளமானது அவர்களின் இரவு..
 
 சத்தியம் செய்து
 சமாதானம் செய்தவன்
 நித்திரை சென்றுவிட்டான்..
 
 பாவம்..
 அவன் கண்ட கனவு மட்டும்
 உறங்கவே இல்லை....
 அவன் மனைவியைப் போலவே
 
 ✍️செ.இராசா 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment